திருப்பூர் மாவட்டம், பல்லடம் அரசு மருத்துவமனையில் ஆட்சியர் கிறிஸ்துராஜ் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் தற்கொலைக்கு முயன்ற மாணவரை, ஆட்சியர் கிறிஸ்துராஜ் சந்தித்தார்.
அந்த மாணவரிடம் பேசிய ஆட்சியர் கிறிஸ்துராஜ், “நான் யார் தெரியுமா? இந்த மாவட்டத்தின் ஆட்சியர். நானெல்லாம் தேர்வுகளில் தோல்வியடைந்து அதன் பிறகு நன்கு படித்து இப்போது வேலையில் இருக்கிறேன்.
தேர்வில் தோல்வி, வெற்றி என்பது மிகப்பெரிய விசயமில்லை. தோல்வி அடைந்தாலும் அதிலிருந்து மீண்டு அடுத்த கட்டத்துக்கு முன்னேறுவதுதான் முக்கியம். இது ஒரு தேர்வு மட்டுமே. தோல்வியால் சோர்வடைய கூடாது. தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு துணைத் தேர்வு உள்ளது. அதில் எழுதி பலர் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள்.

