
சென்னை: விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு வந்த விரைவு ரயிலில் 12 கிலோ கஞ்சா கடத்திய 2 இளைஞர்களை ஆர்.பி.எஃப் மத்திய புலனாய்வு பிரிவினர் கைது செய்தனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சட்ட விரோதமாக போதைப் பொருள் கடத்தப்படுவதாக ஆர்.பி.எஃப். மத்திய புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் மதுசூதன ரெட்டிக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது. இதன் பேரில், போலீஸார் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது, விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் நிலையத்தின் 7-வது நடைமேடைக்கு ஒரு விரைவு ரயில் வந்தது.

