Saturday, September 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பார்வையாளர்கள் ஆன போலீஸார்: கட்டுப்பாடின்றி காளைகள் அவிழ்த்து விடப்பட்டதால் அய்யம்பட்டி ஜல்லிக்கட்டு நிறுத்தம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 23, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
பார்வையாளர்கள் ஆன போலீஸார்: கட்டுப்பாடின்றி காளைகள் அவிழ்த்து விடப்பட்டதால் அய்யம்பட்டி ஜல்லிக்கட்டு நிறுத்தம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

இளையான்குடி: அய்யம்பட்டி ஜல்லிக்கட்டில் போலீஸார் பார்வையாளராக மாறிய நிலையில், கட்டுப்பாடின்றி ஆங்காங்கே காளைகள் அவிழ்த்துவிடப்பட்டதால் ஜல்லிக்கட்டு பாதியில் நிறுத்தப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே அய்யம்பட்டி ஜல்லிக்கட்டில் பாதுகாப்புப் பணியை மேற்கொள்ளாமல் போலீஸார் பார்வையாளர்களாக மேடையில் அமர்ந்து கொண்டனர். இதனால் கட்டுப்பாடின்றி காளைகள் ஆங்காங்கே அவிழ்க்கப்பட்டதை அடுத்து ஜல்லிக்கட்டை பாதியில் டிஎஸ்பி நிறுத்தினார்.

அய்யம்பட்டி கலுங்கு முனீஸ்வரர் கோயில் திருவிழாவையெட்டி இன்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் பங்கேற்க சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட காளைகள் பதிவு செய்திருந்தன.



ஜல்லிக்கட்டை காலை 9.30 மணிக்கு தமிழரசி எம்எல்ஏ தொடங்கி வைத்தார். வட்டாட்சியர் கோபிநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பாதுகாப்புக்கு வந்திருந்த போலீஸார், பார்வையாளராக மாறி, மேடையில் அமர்ந்து கொண்டனர். விழாக் குழுவினர் பலமுறை கேட்டு கொண்டும் போலீஸார் பாதுகாப்பு பணிக்கு செல்லாமல் மேடையிலேயே அமர்ந்து கொண்டனர். இதனிடையே திடீரென கட்டுப்பாடின்றி காளைகளை மைதானத்துக்கு வெளிப்புறமாக ஆங்காங்கே அவிழ்க்கப்பட்டன.

பல காளைகள் பார்வையாளர்கள் பகுதிக்குள் புகுந்தன. சில காளைகள் அன்னதானம் நடைபெற்ற பகுதிக்குள்ளும் சென்றது. இதனிடையே, அங்கு வந்த சிவகங்கை டிஎஸ்பி சிபி சாய்சவுந்தரியன் போட்டியை பாதியில் பிற்பகல் 1 மணிக்கே நிறுத்தினார். இதனால் காளைகளை அவிழ்க்க முடியாத, அதன் உரிமையாளர்களும், பார்வையாளர்களும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

முன்னதாக நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 120 காளைகள் வரை அவிழ்க்கப்பட்டன. காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், அடங்காத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்க காசு, வெள்ளிகாசு, பீரோ, கட்டில், அண்டா உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. மாடு முட்டியதில் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பத்து பேர் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

.

Tags: அயயமபடடஅவழததஆனகடடபபடனறகளகளநறததமபரவயளரகளபலஸரவடபபடடதலஜலலககடட
Previous Post

Nagapattinam: ‘கல்விக்கு தடையேது’ மணக்கோலத்தில் மலர் மாலையுடன் தேர்வு எழுதிய மாணவி; மணமகனுக்கு குவியும் பாராட்டு!

Next Post

2G Case Update: ’ஆ.ராசா உள்ளிட்டோரை விடுவித்தது அப்பட்டமான சட்டவிரோதம்' நீதிமன்றத்தில் சிபிஐ வாதம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
2G Case Update: ’ஆ.ராசா உள்ளிட்டோரை விடுவித்தது அப்பட்டமான சட்டவிரோதம்' நீதிமன்றத்தில் சிபிஐ வாதம்

2G Case Update: ’ஆ.ராசா உள்ளிட்டோரை விடுவித்தது அப்பட்டமான சட்டவிரோதம்' நீதிமன்றத்தில் சிபிஐ வாதம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In