இந்தியாவில் இருந்து இடம்பெயரும் மில்லியனர்கள் தேர்வு செய்யும் இடங்கள்…
இந்தியாவில் இருந்து இடம்பெயர்பவர்களுக்கான சிறந்த தேர்வாக சிங்கப்பூர் இருக்கிறது. துபாய் மற்றும் சிங்கப்பூர் பணக்கார இந்திய குடும்பங்களுக்கான சிறந்த இடமாக உள்ளது. அங்குள்ள அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் உலகளாவிய முதலீட்டாளர் `கோல்டன் விசா’ திட்டம், சாதகமான வரி சூழல் மற்றும் பாதுகாப்பான அமைதியான சூழலுக்காக இங்கு இடம்பெயர்கின்றனர்.
2023 ஆம் ஆண்டில், ஆஸ்திரேலியாவுக்கு 5,200 மில்லியனர்களும், சிங்கப்பூருக்கு 3,200 மில்லியனர்களும் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் அமெரிக்கா தனது மில்லியனர் கிளப்பில் 2,100 பேரைச் சேர்க்கும்.
சுவிட்சர்லாந்து, கனடா, கிரீஸ், பிரான்ஸ், போர்ச்சுகல் மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு மில்லியனர்கள் செல்வது அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நாடுகளே மில்லியனர்களின் வருகை அதிகமுள்ள 10 நாடுகளின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
