திராவிட முன்னேற்றக் கழகத்தின் (DMK) அதிகாரபூர்வ இதழான முரசொலி உள்ளது. இது மறைந்த திமுக தலைவர் கருணாநிதியால் தொடங்கப்பட்டது. முரசொலியின் ஃபேஸ்புக் பக்கம், அதன் ஸ்டேட்டஸில் கேவலமான, ஆபாசப் படங்களைப் பதிவேற்றியுள்ளது தெரியவந்துள்ளது.
தனது பக்கம் ஹாக் செய்யப்பட்டுள்ளதை அறிந்துகொண்ட முரசொலி நிர்வாகம், சைபர் கிரைம்-க்கு புகார் அளித்துள்ளது. அப்புகாரில் ஹாக் செய்த நபர்கள் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்து பணம் கேட்டு மிரட்டுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

