இது குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், “அமைச்சர்களுக்கு எதிராக அமலாக்கத்துறையின் இடைவிடாத நடவடிக்கைகளைக் கடுமையாக கண்டிக்கிறேன். செந்தில் பாலாஜியின் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனைகளின் மூலம், ஜனநாயக விரோதமாக மத்திய அரசுக்கு நடக்கிறது. மத்திய அரசின் மீது தொடுக்கப்படும் விமர்சனங்களை நசுக்கும் நோக்கத்தில் அமலாக்கத்துறையை ஏவியிருக்கிறார்கள்” எனக் கூறினார்.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி, “அமைச்சர் மீது அமலாக்கத்துறை சோதனை நடத்தியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் நோக்கத்தில் மத்திய அரசு அமலாக்கத்துறையைப் பயன்படுத்தியிருக்கிறது” என்றார்.
இது குறித்து காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ”அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் நள்ளிரவில் கைது செய்தது கண்டனத்திற்குறியது. இது பாஜகவின் அரசியல் துன்புறுத்தல் மற்றும் பழிவாங்கும் நடவடிக்கை. எதிர்க்கட்சியில் இருக்கும் யாரும் இதுபோன்ற நடவடிக்கைகளுக்குப் பயப்பட மாட்டோம்” என தெரிவித்துள்ளார்.
இவ்வாறாக தமிழக முதலமைச்சர் மற்றும் மற்ற தலைவர்கள் இதற்கு கண்டனம் தெரிவிக்கின்றனர். `மாநில சுயாட்சி’ குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பேசியிருக்கும் அதேவேளையில், கடந்த 2016-ம் ஆண்டு தலைமைச் செயலாளர் ராம் மோகன் ராவ் அலுவலகத்தில் நடத்திய சோதனையை அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது கண்டித்தாரே தவிர, அன்று ’மாநில சுயாட்சி’ குறித்து பேசவில்லையே என்னும் விமர்சனமும் கிளம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

