அதில், பொதுச்செயலாளர் பதவிக்கு வைகோ, துணைப் பொதுச்செயலாளர் பதவிக்கு மல்லை சத்யா உள்ளிட்ட ஐந்து பேரும், ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள் பதவிக்கு ஏழு பேரும், தணிக்கைக்குழு உறுப்பினர்கள் பதவிக்கு ஆறு பேரும் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். குறிப்பாக, முதன்மைச் செயலாளர் என்ற புதிய பதவிக்கு துரை வைகோ வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
இது தவிர, முன்பு ம.தி.மு.க அவைத்தலைவராக இருந்த திருப்பூர் துரைசாமி விலகிய நிலையில், புதிய அவைத்தலைவராக ஆடிட்டர் அர்ஜுனராஜ் மனுத்தாக்கல் செய்தார். மேலும், கட்சியின் மூத்த தலைவரும் ஈரோடு தொகுதியின் எம்.பி-யுமான கணேசமூர்த்தி வசமிருந்த பொருளாளர் பதவிக்கு, செந்திலதிபன் என்பவர் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். கணேசமூர்த்தி மனுத்தாக்கல் செய்யும் நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை. இந்த நிலையில், கணேசமூர்த்தி கட்சியில் துரை வைகோ வருவதை விரும்பவில்லை என்றும், அவர் தலைமைமீது அதிருப்தியில் இருப்பதாகவும், விரைவில் தி.மு.க-வில் இணையவிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.

