மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஹவுராவில் பெண் கிராம சபை வேட்பாளர் ஒருவர் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்துசெல்லப்பட்டதாகக் கூறி வீடியோ ஒன்றை செய்தி ஊடகங்களில் நேற்றிலிருந்து சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. பாஜக சம்பந்தப்பட்ட Twitter பக்கங்கள் இதை வேகமாக பரப்பின.
பாஜகவின் தேசிய IT Team தலைவர் திரு.அமித் மாளவியா அவர்களும் இந்த செய்தியை பற்றி ” உங்களுக்கு வெக்கம் இருக்கிறதா ? மம்தா பானர்ஜி அவர்களே.. ” என்று ஆக்ரோஷமாக கேட்டிருந்தார்.
இந்த வழக்கு குறித்த முதற்கட்ட விசாரணைக்கு பிறகு மேற்கு வங்க டிஜிபி மற்றும் காவல்துறை தெரிவித்த தகவல்களாவன :
- ஜூலை 13 அன்று மின்னஞ்சலில் எங்களுக்கு புகார் வந்தது.
- அதில் சம்பவம் ஜூலை 8 அன்று நடந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
- சம்பவம் நடந்ததகாகக் கூறப்பட்ட ஜூலை 8 அன்று காவல்துறையினர், கட்சித் தொண்டர்கள் மற்றும் பலர் சம்பவ இடத்தில் தான் இருந்தனர். ஆனால் அப்படி ஒரு சம்பவமும் அங்கு நடக்கவில்லை.
- சிசிடிவி காட்சிகளையும் காவல்துறையினர் சோதனை செய்தனர். இந்தக் சம்பவம் நடந்ததற்கான எந்த ஆதாரமும் அதில் இல்லை.
இந்த பொய் செய்தியை வெளியிட்ட செய்தி ஊடகங்கள், காவல்துறையின் மறுப்பையும் தாங்கள் வெளியிட்ட தவறான செய்திகளுக்கான மறுப்பு செய்திகளையும் வெளியிட்டதாக தெரியவில்லை.



