Saturday, September 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

“இரு கோடுகள்” கதை தான்..! – எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகம் குறைப்பு – தென்னிந்திய ரயில்வே..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 30, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
“இரு கோடுகள்” கதை தான்..! – எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகம் குறைப்பு – தென்னிந்திய ரயில்வே..!
63
SHARES
101
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

தமிழ்நாட்டில் வந்தே பாரத் ரயிலுக்காக வைகை எக்ஸ்பிரஸ், பாண்டியன், பொதிகை உள்ளிட்ட பிற ரயில்களின் வேகம் குறைக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக மதுரையில் இருந்து காலை 7.10க்கு புறப்படும் வைகை அதிவிரைவு ரயில், நாளை முதல் காலை 6.40 மணிக்குப் புறப்பட உள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது. வந்தே பாரத் ரயில் வெற்றிகரமாக இயங்குவதுபோல் காட்டுவதற்காக எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகம் குறைக்கப்படுவதாகக் குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் ரெயில்களின் புதிய பயண நேரப்படி மதுரை-சென்னை மார்க்கத்தில் வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலின் பயண நேரம் 15 நிமிடங்கள் அதிகமாகவும், பாண்டியன் எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், முத்து நகர் எக்ஸ்பிரஸ் மற்றும் நெல்லை எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்களின் பயண நேரம் 10லிருந்து 15 நிமிடங்கள் வரையும் அதிகரிக்கப்படுகிறது.

‘வந்தே பாரத்’ ரெயிலின் பயண நேரம் (சென்னை-மதுரை) 5 மணி 50 நிமிடங்களாகவும், பிற அதி விரைவு (Super Fast) ரெயில்களின் பயண நேரம் 7 மணி 45 நிமிடங்கள் எனவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

பத்து வருடங்களுக்கு முன்பு, சதாப்தி ரெயில்களில் பயணிப்பதை ஊக்குவிக்க அதே தடத்தில் பிற ரெயில்களின் பயண நேரங்களை அதிகரிக்க செய்த முயற்சியை போலவே பயணிகளால் இது பார்க்கப்படுகிறது.

பெரும் பொருட்செலவில் ரெயில் பாதைகளை மேம்படுத்தி விட்டு அதன் பயன் மற்ற அதி விரைவு ரெயில் பயண கட்டணங்களை விட பலமடங்கு அதிகமுள்ள ரெயில்களுக்கு மட்டுமே பலனளிக்கும் வகையில் மாற்றியமைத்திருப்பது ஒரு வகையில் மக்களை ஏமாற்றும் வேலை என ரெயில் பயணிகள் விமர்சிக்கின்றனர்.

K.பாலச்சந்தரின் இரு கோடுகள் படத்தில் ஒரு கோட்டைசிறிதாக காட்ட பக்கத்தில் ஒரு பெரிய கோடு போடுவார். அதுபோல வந்தே பாரத் ரயிலின் வேகத்தை அதிகப்படுத்த முடியாமல் மற்ற எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகத்தை குறைக்கின்றனர். ஏற்கனவே எல்லா ரயில்களும் தாமதமாகத்தான் சென்றடைகின்றனர், மேலும் வேகத்தை குறைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களை தாமதப்படுத்துவது பயணிகள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்துகிறது.

Previous Post

“நம்பிக்கை துரோகத்தின் சின்னம்தான் பண்ருட்டி ராமச்சந்திரன்” – கே.பி.முனுசாமி கொந்தளிப்பு

Next Post

“எவ்வளவு மழை பெய்தாலும் தாங்கும் சக்தி, தமிழகத்துக்கு உண்டு” – அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“எவ்வளவு மழை பெய்தாலும் தாங்கும் சக்தி, தமிழகத்துக்கு உண்டு” - அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்

“எவ்வளவு மழை பெய்தாலும் தாங்கும் சக்தி, தமிழகத்துக்கு உண்டு” - அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In