
சிவகங்கை: “உதயநிதி பேச்சால் ‘இண்டியா’ கூட்டணி சிதறும்” என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.
சிவகங்கையில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “ஆதிதிராவிடர்கள் மேம்பாட்டுக்காக மத்திய அரசு ரூ.1.12 லட்சம் கோடி ஒதுக்கியது. அதில் ரூ.16,442 கோடி தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், தமிழக அரசு ரூ.5,976 கோடிதான் செலவு செய்துள்ளது. மீதிப் பணத்தை வேறு திட்டங்களுக்கு மாற்றியதா அல்லது செலவழிக்கவில்லையா என்று தெரியவில்லை. கடந்த காலங்களில் இலவச டிவி திட்டத்துக்கே ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கிய நிதியைதான் பயன்படுத்தினர்.

