
பழநி: பழநி வைகாசி விசாகத் திருவிழாவின் 6-ம் நாளான நேற்று (ஜூன் 1) இரவு திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா மே 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவில் தினமும் முத்துக்குமாரசுவாமி சமேத வள்ளி, தெய்வானை பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தனர்.

