மணிப்பூரில் இரண்டு பழங்குடியின பெண்கள் நூற்றுக்கணக்கான ஆண்களால் நிர்வாணமாக இழுத்துச் சென்ற வீடியோவை ட்விட்டரிலிருந்து நீக்க வேண்டும் என ட்விட்டர் நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான வீடியோக்கள் சோஷியல் மீடியாக்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த சம்பவம் குறித்து குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பிரதமர் மோடி மணிப்பூர் விவகாரத்தில் தலையிட வேண்டும் என்றும் வலியுறுத்த தொடங்கியுள்ளனர். பிரச்னை பெரியதாக உருவாகி வருகிறது. அதேபோல இதில் ஈடுபட்டவர்களுக்கு அதிகபட்ச தண்டனை பெற்று தரப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் பிரேன் சிங் கூறியுள்ளார். இந்நிலையில், இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாகவும் எனவே வீடியோக்களை டிவிட்டர் உள்ளிட்ட சோஷியல் மீடியாக்களில் பகிரப்படக்கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


