“ஆனால் கைதுக்கான சம்மனை செந்தில் பாலாஜி வாங்கிக்கொள்ளவில்லை என அமலாக்கத்துறை குற்றம்சாட்டுகிறதே?”
“`சம்மன் கொடுத்தேன், வாங்கிக்கொள்ளவில்லை’ என்றுதான் விதிமீறும் எல்லா அதிகாரிகளும் சொல்வார்கள். ஏன் சம்மனை கையில் வாங்காவிட்டால் படித்துக்காட்ட வேண்டியதுதானே… படித்துக்காட்டினால் செந்தில் பாலாஜி காதை மூடிக்கொள்வாரா… அப்படி படித்துக்காட்டியதாக அமலாக்கத்துறை குறிப்பிடவில்லையே… ஓமந்துரார் மருத்துவமனையில் இரண்டு நிமிடங்கள் செந்தில் பாலாஜியைச் சந்தித்தேன். சம்மனைக் கொடுத்து உடனே வர வேண்டும் என்றார்கள். அவகாசம் கொடுத்து நேரில் வரச் சொல்வதுதானே சம்மன்?
`இது கைதா இல்லையா’ என்று செந்தில் பாலாஜி கேட்டதாகச் சொன்னார். `சொன்னா வாங்க…’ என்று வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றதாகவும் அவர் கூறினார். `நெஞ்சு வலிக்கிறது என்று சொன்ன பிறகும் நம்பவில்லை. பிறகுதான் மருத்துவமனைக்கு அழைத்து வந்தார்கள். கைது செய்தார்களா, இல்லையா என்றே எனக்குத் தெரியவில்லை’ என்கிறார் அவர்.”
“செந்தில் பாலாஜியின் மனைவியிடம் சம்மன் கொடுத்துவிட்டோம் என்கிறார்களே?”
“செந்தில் பாலாஜியின் மனைவி அப்போது வீட்டில் இல்லை. அவருக்கு இ-மெயிலும் அனுப்பப்படவில்லை.”

