Sunday, September 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மகளிர் உரிமைத் தொகை, 63 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிப்பு?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 25, 2023
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
மகளிர் உரிமைத் தொகை,  
63 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிப்பு?
40
SHARES
65
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை  திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பித்துள்ள 1.63 லட்சம் பேரில் தகுதியில்லாத  63 லட்சம்  விண்ணப்பங்களை நிராகரிக்கும் முடிவில்  தமிழக அரசு தீவிரமாக உள்ளது.

திமுக  தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி செப்டம்பர் மாதம் 15 ம் தேதி பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் அன்று கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்பட இருக்கிறது. இதற்கு விண்ணப்பிக்கும் முகாம் கடந்த ஜூலை மாதம் இறுதியில் தொடங்கி ஆகஸ்டு20ம் தேதி வரை மூன்று கட்டங்களாக சிறப்பு முகாம்கள் நடைபெற்றது.  இந்த முகாம்களின் மூலமாக ஒரு கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் வந்து உள்ளன.

ஆனால், குடும்பத்தில் ஆண்டு வருமானம் ரூபாய் 2.5 லட்சத்துக்கு மேல் ஈட்டி வருமானவரி கணக்கு தாக்கல் செய்பவர்கள், ஆண்டுக்கு 50 லட்சத்திற்கும் மேல் விற்பனை செய்து ஜிஎஸ்டி செலுத்தும் தொழில் நிறுவன உரிமையாளர்கள், ஆண்டிற்கு வீட்டு உபயோகத்துக்கு 3,600 யூனிட்டிற்கும் அதிகமாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்களின் தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத் தொகை கிடையாது என்று அரசு அறிவித்துள்ளது.

அதேபோல், சொந்த பயன்பாட்டுக்கு 4 சக்கர வாகனங்கள் வைத்துள்ளவர்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள் மற்றும் வருமான வரி செலுத்துபவர்கள், மத்திய மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகளின் ஊழியர்கள், ஊராட்சி வார்டு கவுன்சிலர்கள் தவிர்த்த உள்ளாட்சி பிரதிநிதிகள் உரிமைத் தொகை கோர முடியாது.

ஆனால் அவர்களும் தற்போது விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே விண்ணப்பங்களில் சரியான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதா என்பதை விண்ணப்பதாரர்களின் வீட்டுக்கு சென்று ஆய்வு செய்யப்படும் என அரசு அறிவித்து தற்போது ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. ஒரு கோடி பேருக்கே உரிமைத் தொகை என அரசு முடிவு செய்த நிலையில் கூடுதலாக இருக்கும் 63 லட்சம் பேரை வடிகட்ட அரசு முடிவு செய்துள்ளது.

வீடு வீடாக சென்று அரசு ஆய்வு மேற்கொண்டு வரும் பணியாளர்களிடம், விண்ணப்பதாரர்கள்  தவறான தகவல்கள் கொடுத்திருப்பதை முறையாக ஆய்வு செய்து, கண்டறிந்து  தகுதியற்ற விண்ணப்பதாரர்களை நீக்க வேண்டும் என்று அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி முதற்கட்ட பட்டியலும், அதன் தொடர்ச்சியாக இறுதிப் பட்டியல் தயார் செய்யப்படும். அவர்களுக்கே உரிமைத் தொகை வழங்கப்படும் என்று தெரிகிறது.

.

Tags: உரமததகநரகரபபமகளரலடசமவணணபபஙகள
Previous Post

ரூ.10 கோடி நிவாரணம் வழங்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு இமாச்சல் முதல்வர் பாராட்டு

Next Post

தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் 2 நாட்கள் லேசான மழைக்கு வாய்ப்பு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் 2 நாட்கள் லேசான மழைக்கு வாய்ப்பு

தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் 2 நாட்கள் லேசான மழைக்கு வாய்ப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In