தமிழில் பிரபலமான இனியா, சிறகடிக்க ஆசை உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வருபவர் ப்ரீத்தா ரெட்டி. சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த சுவாரஸ்யமான பேட்டி இதோ:
என்னுடைய சிறு வயதி ஆசை. என் உறவினர்கள் விளம்பரங்கள் ஷூட் பண்ணுவாங்க. அவர்களை ஊரில் வியப்போடு பார்ப்பாங்க. அப்போதே எனக்கு ஆசை வந்துவிட்டது. ஆனாலும் தொடங்கியது மாடலிங் தான்.
கல்லூரி படிக்கும் போது ஆடிஷன்ஸ் பங்கேற்று, சீரியலுக்குள் வந்தேன். முதலில் நான் முயற்சித்தது சினிமா தான். ஆனால், அதில் எனக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை. எனக்கு பின்னணி இல்லாததால் எதையும் ரீச் பண்ண முடியவில்லை.
தெரியாமல் ஒரு இடத்திற்கு போகிறோம் என்றால், அவர்கள் சொல்வதை தான் நாம கேட்டுப்போம். நடிக்கும் ஆசையில் தான் அங்கு வருகிறோம். அங்கே போங்க, இங்கே போங்க என்று கூறுவார்கள். அப்படி போனாலும், அங்கே தேர்வாக மாட்டோம். உறுதியாகி கையெழுத்துப் போடும் போது, சில நிபந்தனைகள் வைப்பார்கள். அது வேண்டாம், என விட்டு விட்டு வந்ததும் உண்டு.
பெரும்பாலும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ணனும் என்று சொல்வார்கள். நேரடியாக சம்மந்தப்பட்டவர்கள் கேட்பார்களா, அல்லது இவர்களே சொல்வார்களா என்பது நமக்கு தெரியாது. அப்போ நம்மால் அதை உறுதிபடுத்த முடியாது. ‘இந்த ஃபீல்ட் இப்படி தான் இருக்கும் போல’ என்று தவிர்த்து விட்டு தான் போக வேண்டியிருந்தது. அதனால் சினிமாவில் ஆசை போய்விட்டது.
சினிமா வாய்ப்பு கேட்டு போகும் போது, கதாபாத்திரங்களை தேர்வு செய்யும் இயக்குனர்கள் தான் எங்களிடம் அப்ரோச் பண்ணுவாங்க. ‘அவங்க கேட்குறாங்க’ என்று தான் சொல்வார்கள். ‘அப்படி ஒன்றும் தேவையில்லை’ என்று நான் வந்துவிடுவேன்.
எல்லாருக்குமே இது நடந்திருக்கும். சொல்லாமல் வேண்டுமானால் இருந்திருக்கலாம். ஃபீல்டு தெரியாமல் போனால், கண்டிப்பாக நம்மை அதற்காக அணுகுவார்கள். ஒரு தயாரிப்பாளரிடம் பேசும் போது, ‘இதுக்கெல்லாம் ரெடி இல்லை என்றால், எதுக்கு இந்த ஃபீல்டுக்கு வர்றீங்க?’ என்று கேட்டார்.
அதுவரை யாரோ ஒருவர் மூலம் கேட்கப்பட்டதை, அந்த தயாரிப்பாளர் நேரடியாகவே கேட்டார். அவரிடம் என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. இதை தான் செய்ய வேண்டும் என்றால், எதற்கு சினிமாவுக்கு வர வேண்டும்? அதற்கு அதையே தொழிலா செய்துவிட்டு போகலாமே? நாம தான் தவறாக தொழிலை தேர்வு செய்துவிட்டோம் என்று சினிமா வாய்ப்பை தவிர்த்துவிட்டேன்.
சீரியலில் அந்த தொல்லை இல்லை என்று கூறமாட்டேன். இருக்கலாம். ஆனால் நான் இதுவரை சீரியலில் அந்த பிரச்னையை நான் இதுவரை சந்தித்தது இல்லை. சினிமாவில் தேர்வான பிறகு தான், இந்த விசயத்தை எல்லாம் கேட்பார்கள். அதனால் தான் சினிமாவில் முயற்சிக்கவே இல்லை,’’
என்று அந்த பேட்டியில் ப்ரீத்தா ரெட்டி கூறியுள்ளார்.

