
சென்னை: "ஓ.பி.ரவீந்திரநாத் அதிமுக கிடையாது என்று கட்சியின் சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. அவருக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அவர் சுயேச்சை எம்.பி என்ற அடிப்படையில்தான் அவரை அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைத்திருப்பார்கள்" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "அதிமுக ஒரு மிகப் பெரிய சக்தி என்பதை இன்றைக்கு இந்தியாவே உணர்ந்திருக்கிறது. அதன் அடிப்படையில்தான் அதிமுகவுக்கு இந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதைத்தான் பார்க்க வேண்டும்.

