மும்பை: மும்பையின் கோரேகானில் உள்ள ஏழு மாடி கட்டிடத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர், மேலும் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது. தீ விபத்து தொடர்பான காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
ஆசாத் மைதானம் அருகே உள்ள எம்ஜி சாலையில் உள்ள ஜெய் பவானி கட்டிடத்தில் அதிகாலை 3 மணியளவில் ஏற்பட்ட தீ, லெவல் 2 பிரிவில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்
கட்டிடத்தில் 2-ம் நிலை தீ விபத்து ஏற்பட்டதில் 30-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்டவர்கள் உடனடியாக பல்வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாக BMC தகவல் தெரிவித்துள்ளது. இதுவரை, தீ விபத்தில் காயமடைந்த 46 பேரில், 7 பேர் உயிரிழந்துள்ளனர், 39 பேர் எச்பிடி மற்றும் கூப்பர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது.

