மகாராஷ்டிரா , புனே : லோக்மான்ய திலக் நினைவு அறக்கட்டளையின் மதிப்புமிக்க “லோகமான்ய திலக் தேசிய விருதை” பிரதமர் நரேந்திர மோடி பெற உள்ள நிலையில், ஆகஸ்ட் 1 ஆம் தேதி அவருக்கு அன்பான வரவேற்பை வழங்க புனே தயாராகி வருகிறது. ஏற்பாட்டாளர்களின் கூற்றுப்படி, இந்த விருது அவரது உயர்ந்த தலைமைத்துவத்திற்கும், குடிமக்கள் மத்தியில் தேசபக்தி உணர்வை வளர்ப்பதில் அவர் மேற்கொண்ட முயற்சிக்கும் சான்றாகும்.
தக்துஷேத் கணபதி அறக்கட்டளை சார்பில் கூறிய ஹேமந்த் ரசானே, “இந்த புனித நாளில் நமது கோவிலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு விருந்தளிப்பதை பெருமையாக கருதுகிறோம். தேசத்தின் நல்வாழ்வுக்காக கணபதிக்கு மகா ஆரத்தி மற்றும் அபிஷேகம் நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன” என்று கூறினார்.
ஏற்கனவே பல்வேறு நாடுகளின் உயர் விருதுகளை பெற்றவர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

