தென்கோடி மாவட்டத்தைச் சேர்ந்த ‘க்ரீன்’ மாஜி, துறைமுகத் தொகுதியில் போட்டியிடுவதற்காக சுறுசுறுப்பாக களமிறங்கி உள்ளார். அதற்காக, சமீபத்தில் தனியார் மண்டபம் ஒன்றை வாடகைக்கு எடுத்து, தொகுதியின் முக்கியமான நிர்வாகிகளுக்கு கறி விருந்து வைத்திருக்கிறார். அப்போது, ‘எப்படியும் துறைமுகத்தில் எனக்குதான் சீட் கிடைக்கும். அதனால எல்லோரும் எனக்கு வேலை செய்யுங்கள்’ என்று அன்புக் கட்டளையும் போட்டியிருக்கிறார்.
அதேநேரம், அந்தத் தொகுதி மலர்க் கட்சியின் கையில் இருப்பதால், கூட்டணிக்குள் புகைச்சல் ஏற்பட்டிருக்கிறது. இந்தக் கறி விருந்து குறித்து, இலைக் கட்சியின் மாவட்டச் செயலாளர் சுந்தரமானவரிடம் மலர்க் கட்சியினர் புகார் கொடுக்க, ‘நான் பார்த்துக்கிறேன்…’ எனச் சமாதானம் செய்துவைத்திருக்கிறார் சுந்தரமானவர். ஆனால், ‘மலர்க் கட்சிக்கு எதிராக அந்தத் தொகுதியில் கிரீன் மாஜியைக் களமிறக்கிவிட்டதே சுந்தரமானவர்தான்’ என ட்விஸ்ட் வைக்கிறார்கள் இலைக் கட்சியினர்!

