
சென்னை: தமிழக ஆளுநர் மாளிகை நுழைவுவாயில் பகுதியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்துக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசைமற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறியிருப்பதாவது:
தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: தமிழக ஆளுநருக்கு எதிராக வார்த்தைவன்முறைகளும், செயல் வன்முறைகளும் அண்மை காலமாகஅதிகமாக ஆளுங்கட்சி ஆதரவாளர்களால் ஊக்கப்படுத்துவது கவலை அளிக்கிறது. இது ஜனநாயகத்துக்கு ஏற்புடையது அல்ல. கருத்தை கருத்தால் எதிர்கொள்ள வேண்டுமே தவிர கலவரத்தால் அல்ல. மேலும் ஆளுநரின் மாண்பும், ஆளுநர் மாளிகையின் மாண்பும் காக்கப்பட வேண்டும், தாக்கப்படக்கூடாது என்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

