Chennai oi-Vignesh Selvaraj
Published: Thursday, June 29, 2023, 21:39 [IST]
சென்னை: “அரசியலமைப்புச் சட்டத்தில் சட்டப்பிரிவு 356ன் படி மட்டுமே ஆளுநர் மாநில அரசை கலந்தாலோசிக்காமல், தன்னிச்சையாக முடிவெடுக்கலாம். அதைத்தாண்டி அமைச்சரை பதவியில் இருந்து நீக்க ஆளுநருக்கு உரிமை இல்லை.” என திமுக வழக்கறிஞர் சரவணன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தன்னிச்சையாக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கியுள்ளதைத் தொடர்ந்து, ஆளுநருக்கு, அமைச்சரை நீக்க அதிகாரம் இல்லை, இதை நாங்கள் சட்டரீதியாக சந்திப்போம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆளுநரின் இந்த நடவடிக்கை தொடர்பாக பேசியுள்ள திமுக வழக்கறிஞர் சரவணன் அண்னாதுரை, “அரசியலமைப்புச் சட்டத்தை துச்சமாக மதித்துள்ளார் ஆளுநர் ரவி. இந்திய அரசமைப்பு சட்டத்தின்படி ஆளுநருக்கு எந்த அதிகாரமும் கிடையாது. ஆட்சி அமைப்பதற்கு அழைப்பது உள்ளிட்ட விவகாரங்களில் ஆளுநர் அதிகாரம் கொண்டவர். வெறும் பேப்பர்.. ஆளுநர் வெளியிட்ட அறிவிப்புக்கு பவரே கிடையாது.. வரிந்துகட்டி வந்த மூத்த வழக்கறிஞர்! அரசியலமைப்புச் சட்டத்தில் சட்டப்பிரிவு 356ன் படி மட்டுமே ஆளுநர் மாநில அரசை கலந்தாலோசிக்காமல், தன்னிச்சையாக முடிவெடுக்கலாம். அதைத்தாண்டி அமைச்சரை பதவியில் இருந்து நீக்க ஆளுநருக்கு உரிமை இல்லை. நாளை மணிப்பூர் கலவர விவகாரத்தில் சரியான முறையில் கையாளவில்லை என உள்துறை அமைச்சர் அமித் ஷாவை குடியரசுத் தலைவர் டிஸ்மிஸ் செய்தால் பாஜகவினர் ஏற்றுக்கொள்வார்களா? பாஜகவின் 30க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் மீது குற்ற வழக்குகள் இருக்கிறது, கொலை வழக்குகள் இருக்கிறது. அவர்கள் மீதெல்லாம் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? ஆளுநர் மாளிகை வெளியிட்ட பேப்பருக்கு இருக்கும் மதிப்பு கூட ஆளுநரின் உத்தரவுக்கு கிடையாது” எனத் தெரிவித்துள்ளார்.
நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற
Allow Notifications
You have already subscribed English summary
“Governor can take arbitrary decisions without consulting the state government only according to Article 356 . Beyond that, the governor has no right to dismiss the minister” said DMK lawyer Saravanan.
Story first published: Thursday, June 29, 2023, 21:39 [IST]

