2019 பிப்ரவரியில் இந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டது. தற்போது 25 வழித்தடங்களில் 50 ரயில்கள் இயங்குகின்றன.
இந்த மாத இறுதிக்குள் இன்னும் 4 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட வாய்ப்புள்ளது.
வந்தே பாரத் ரயிலின் வேகம் குறித்த கேள்விகள், இந்த ரயிலுக்கான தேவை உண்மையில் அதிகமாக உள்ளதா என்ற கேள்வியையும் எழுப்புகிறது. தற்போது பல வந்தே பாரத் ரயில்கள் 8 பெட்டிகளுடன் மட்டுமே இயக்கப்பட்டாலும், அதிலும் பயணிகள் வருகை குறைவாகவே உள்ளது.
போபாலின் ராணி கம்லாபதி நிலையத்திலிருந்து ஜபல்பூருக்குச் செல்லும் வந்தே பாரத் ரயிலில் 8 பெட்டிகள் மட்டுமே உள்ளன. எனினும், இந்த ரயிலில் 2023 ஏப்ரல் 1 முதல் 2023 ஜூன் 29 வரை சராசரியாக 32 சதவீத பயணிகள் மட்டுமே பயணித்துள்ளனர்.
அதே ரயில் 36 சதவீத பயணிகளுடன் மட்டுமே போபால் திரும்பியது. இந்த ரயில் 16 பெட்டிகளுடன் இயங்கி இருந்தால் வெறும் 15 சதவீத இருக்கைகள் மட்டுமே நிரம்பி இருக்கும்.
கேஎஸ்ஆர் பெங்களூரு – தார்வாட் இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் 60 சதவீத இருக்கைகள் மட்டுமே முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த ரயிலிலும் 8 பெட்டிகள் மட்டுமே உள்ளன. ஏறக்குறைய அதே எண்ணிக்கையிலான பயணிகளுடன் அந்த ரயிலில் பெங்களூரு திரும்பியது.
உச்சபட்சமாக, இந்தூர் மற்றும் போபாலுக்கு இடையே இயங்கும் வந்தே பாரத் ரயிலில்தான் மிகக் குறைவான பயணிகள் வருகை பதிவாகியுள்ளது. 21 சதவீத பயணிகள் மட்டுமே இந்த வழித்தடத்தில் பயணித்துள்ளனர். ரயில் மீண்டும் இந்தூர் திரும்பிய போது 29 சதவீத பயணிகள் மட்டுமே பயணித்துள்ளனர்.
டெல்லி காண்ட் முதல் அஜ்மீர் நோக்கி செல்லும் ரயில் 61 சதவீத பயணிகளுடன் மட்டுமே பயணித்துள்ளது. மும்பையில் மட்கான் முதல் சிவாஜி டெர்மினஸ் வரை செல்லும் வந்தே பாரத் ரயிலில் 55 சதவீத பயணிகள் மட்டுமே பயணித்துள்ளனர். இந்த வகையில், பெரும்பாலான வந்தே பாரத் ரயில்களில் குறைவான பயணிகள் மட்டுமே பயணிக்கின்றனர்.

