Saturday, October 4, 2025
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

அவிநாசி: பட்டா வழங்கிய இடத்தில் உரிய அளவீடு செய்து தரக் கோரி போராட்டம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 3, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
அவிநாசி: பட்டா வழங்கிய இடத்தில் உரிய அளவீடு செய்து தரக் கோரி போராட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


பெருமாநல்லூர் அருகே காளிபாளையத்தில் பட்டா வழங்கிய இடத்தில் உரிய முறையில் அளவீடு செய்து தரக் கோரி பொதுமக்கள் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டுள்ளனர்.

திருப்பூர் ஒன்றியம், அவிநாசி வட்டம் காளிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வாரணாசி பாளையத்தில் ஆதி திராவிடர் குடியிருப்பு பகுதி மக்கள் 27 பேருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சியில் பட்டா வழங்கப்பட்டது. இந்த இடத்தை உரிய முறையில் அளவீடு செய்து தர வேண்டும் எனக் கோரி ஆதி திராவிட குடியிருப்பு பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை காலை முதல் சம்பவ இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிகாரில் வந்தே பாரத் ரயில் மோதி 4 பேர் பலி, ஒருவர் காயம்

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் அவிநாசி வருவாய்த்துறையினர், அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த ஒரு தரப்பினர் நாங்கள் பயன்படுத்தி வரும் மயானத்திற்கு அருகே பட்டா வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள எரியூட்டு மயானத்திற்கு அருகில் உள்ள மூன்று நபர்களின் பட்டா மட்டும், இடம் மாற்றி, அதே பகுதியில் தெற்கு புறத்தில் வழங்கலாம் என தெரிவித்தனர்.

இதற்கு ஆட்சேபனை தெரிவித்த ஆதிதிராவிடர் பகுதி மக்கள், தற்போது பட்டா வழங்கப்பட்டுள்ள இடத்திலேயே அளவீடு செய்து குடியேற வழிவகை செய்து தரக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசால் வழங்கப்பட்ட பட்டா இடத்தில் இருத்தரப்பினர் ஆட்சேபனையால் அப்பகுதியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Public protest on Friday demanding proper measurement of the land granted under the Patta in kalipalayam near Perumanallur.



.

Previous Post

விரைவில் அறிமுகமாகும் வந்தே பாரத் ஸ்லீப்பர்…! எத்தனை கோச்சுகள் இருக்கும் தெரியுமா…? | இந்தியா

Next Post

கரூர் சம்பவத்தை விசாரிக்க அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு; சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு | Madras High Court orders Special Investigation Team headed by Asra Garg to investigate Karur incident

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கரூர் சம்பவத்தை விசாரிக்க அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு; சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு | Madras High Court orders Special Investigation Team headed by Asra Garg to investigate Karur incident

கரூர் சம்பவத்தை விசாரிக்க அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு; சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு | Madras High Court orders Special Investigation Team headed by Asra Garg to investigate Karur incident

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In