ஆனால், ‘வாங்கிய லஞ்சத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டால், அது குற்றமாகாதா?’ என்கிற விமர்சனங்கள் நீதிமன்றத்தின் உத்தரவை ஒட்டி எழுந்த விமர்சனங்கள், 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, கரூர் பகுதியில் நடந்த வருமான வரித்துறை ரெய்டுகளில் சில ஆவணங்கள் சிக்கியது. அதை அவர்கள் அமலாக்கத்துறையிடம் வழங்கியது, எடப்பாடி – ஓபிஎஸ்ன் டெல்லி பயணம், அண்ணாமலையின் டெல்லி அழுத்தம்” குறித்த விவரங்களையும் விரிவாக அடுக்கியிருந்தும்.
தொடர்ந்து 27/10//21-ல் வெளியான இதழில் “அள்ளிக் குவிக்கிறாங்க, அட்ராசிட்டி பண்றாங்க!” என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில், “பா.ஜ.க மாநிலத் தலைவரான அண்ணாமலை, “ஆளுங்கட்சிப் பிரமுகர் ஒருவர், நலிவடைந்த மின் நிலையம் ஒன்றை வாங்கி, அந்த நிறுவனத்தின் மூலம் 5,000 கோடிக்கு மின்வாரியத்திடம் மின் கொள்முதலுக்கான ஒப்பந்தம் பெறவிருக்கிறார்.

