கிராமத்துக் கதை என்றாலே பழைமைவாதம், மண்ணின் குணம், சாதியைத் தூக்கிப்பிடிக்கும் குறியீடுகள், பாசம், மண் வாசம் என ஊறிப்போன கதையைப் பார்த்த நமக்கு, சமத்துவத்தை நோக்கி காலத்துக்கு ஏற்றார்போல அரசியல் பேசியிருக்கும் முனைப்பு பாராட்டத்தக்கது. ஆனால், தொய்வான திரைக்கதை, நீளமான காட்சியமைப்புகள் படத்துக்கு நிஜ வில்லன்களாக மாறியிருக்கின்றன. அதேபோல க்ளைமாக்ஸ் காட்சி நெஞ்சில் தைக்கும் அளவுக்கு ஆழமாக இருந்தாலும், அதற்கு முந்தைய ஹீரோ vs வில்லன் சண்டை வழக்கமான டெம்ப்ளேட்டாக மட்டுமே கடந்துபோகிறது. அதேபோல கழுவேற்றம் குறித்த வாதமும் மரண தண்டனையை ஆதரிக்கும் போக்காகப் புரிந்துகொள்ளப்படும் ஆபத்து இருக்கிறது.


