Sunday, September 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ஓ அப்படியா… தான் லெஸ்பியன் இல்லை என நடிகை ஓவியா ஓபன்..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 28, 2023
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
தான் லெஸ்பியன் இல்லை என நடிகை ஓவியா தகவல்
29
SHARES
46
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

நீங்கள் லெஸ்பியனா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, நம்புங்கப்பா… நான் அப்படியான பொண்ணு கிடையாது என்று நடிகை ஓவியா படு ஓப்பனாக பதில் அளித்துள்ளார்.

கடந்த 2010ம் ஆண்டில் வெளிவந்த ’களவாணி’ திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ஓவியா. அதன் பின்னர், தொடர்ச்சியாக அடுத்தடுத்து பல படங்களிலும் நடித்திருந்தாலும் இவருக்கு பெரிய அளவிலான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இந்நிலையில், 2017ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது ஆரவ்வை காதலித்து பிரச்சினை ஏற்பட்டது.  அதனால் பிக்பாஸ் வீட்டில் தற்கொலை வரை சென்றார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஓவியாவின் வெகுளித்தனமும், வெள்ளந்தியான பேச்சும் ரசிகர்களை ஈர்த்தது. அதன் பின்னர் இவருக்கு ரசிகர்கள் பேராதரவு கொடுத்தனர். திரையுலகில் கிடைக்காத புகழும் பிரபலமும் அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் ஓவியாவுக்கு கிடைத்தது.

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் நடிகை ஓவியா மீண்டும் கலந்து கொள்ளப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் அண்மையில் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்த  நடிகை ஓவியா, பல கேள்விகளுக்கு வெளிப்படையாக பதில் அளித்துள்ளார்.  இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கு நடிகை ஓவியா ஒரு லெஸ்பியன் என்று சொல்லப்படுகிறதே என்கிற கேள்விக்கு பதிலளித்த ஓவியா, ”நடிகை  என்றாலே இப்படிப்பட்ட பிரச்சினைகள், வதந்திகள் வரத்தான் செய்யும்.  அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் கடந்து போய் கொண்டேயிருக்க வேண்டும். நான் லெஸ்பியன் கிடையாது” என்று பதில் அளித்துள்ளார்

மேலும், “ஹீரோயின்களைப் பொது இடத்தில் தவறாகத் தொடுகிறவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.  அவர்களை அவர்களது பெற்றோர்கள் சரியாக வளர்க்கவில்லை என்று தான் கூற வேண்டும்.

என்னை யாரும் வெறுக்கிற  மாதிரி இருந்தால் அந்த இடத்தில நான் இருக்க மாட்டேன். விலகி விடுவேன். பொய்யாக பழகுறவர்கள் யார் என்பது எனக்கு பார்த்தவுடனேயே தெரிந்து விடும். அதனாலேயே நான் நிறைய பேர் கூட எல்லாம் பழகிக் கொள்ள மாட்டேன். என்னுடன் உண்மையாக  இருக்கிறவர்களுடன் தான் நான் இருக்கிறேன்.

முன்னணி நடிகர்களுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை  எனக்கு கிடையாது. எனக்கு கிடைக்கிற வாய்ப்புக்களையே பெரிதாகத் தான் நினைப்பேன். மற்றபடி பெரிய ஆசைகள் எல்லாம் இல்லை. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்  சந்தோஷமாகவே  இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

.

Tags: இலலஎனஓவய.தகவலதனநடகலஸபயன
Previous Post

பெங்களூருவில் லிவ்-இன் பார்ட்னரை பிரஷர் குக்கரால் அடித்துக் கொன்ற இளைஞர் கைது

Next Post

‘சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோர முடியாது’ – செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் செப்.15 வரை நீட்டிப்பு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
‘சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோர முடியாது’ - செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் செப்.15 வரை நீட்டிப்பு

‘சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோர முடியாது’ - செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் செப்.15 வரை நீட்டிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In