Sunday, September 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பரபரப்பு… காதலனுடன் சேர்ந்து தந்தையைக் கொல்ல திட்டமிட்ட 16 வயது மகள்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 29, 2023
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
பரபரப்பு... காதலனுடன் சேர்ந்து தந்தையைக் கொல்ல திட்டமிட்ட 16 வயது மகள்!
7
SHARES
11
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

காதலுக்கு இடையூறாக இருந்ததால் 16 வயது சிறுமி தனது தந்தையைக் காதலனுடன் சேர்ந்து கொலைச் செய்ய திட்டமிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பகுதியில் பழைய இரும்பு வியாபாரம் செய்து வரும் வேணுகோபால் பாண்டியன் (55) என்பவருக்கு உமா மகேஸ்வரி என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர்.

இந்நிலையில் வேணுகோபால் பாண்டியன் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த போது, 3 பேர் கொண்ட கும்பல் அவரை அரிவாளால் வெட்டியது.

அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

சந்தேகத்தின் பேரில் பெரியகுளம் தென்கரையை சேர்ந்த முத்துக்காமாட்சி (23), செல்வக்குமார் (23), கண்ணப்பன் (21) ஆகிய 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் காதல் விவகாரம் காரணமாக வேணுகோபால் பாண்டியனின் 16 வயது மகளின் தூண்டுதலால் அவரை தாக்கியதாக மூவரும் தெரிவித்த முதற்கட்ட தகவல் அதிர்ச்சியடைய கூறினர்.

கைதான காதலன் முத்துக்காமாட்சி
கைதான காதலன் முத்துக்காமாட்சி

காதல் விவகாரம் தொடர்பாக பிரச்சினை எழுந்ததை அடுத்து, வேணுகோபால் பாண்டியனின் மகள் அவரது பாட்டியுடன் தங்கியிருந்தார். அப்போது ஓட்டுநரான முத்துக்காமாட்சி என்பவர் சிறுமியுடன் பழகி வந்துள்ளார். இது குறித்து தெரிய வந்த சிறுமியின் தந்தை மகளை கண்டித்துள்ளார்.

எனவே, தொடர்ந்து இடையூறாக இருக்கும் வேணுகோபால் பாண்டியனை கொலை செய்ய சிறுமியின் உதவியுடன் முத்துக்காமாட்சி திட்டமிட்டுள்ளார். அதன்படி சம்பவத்தன்று அரிவாளால் வெட்டிக் கொலை செய்ய முயன்றனர்.

இந்நிலையில், முத்துக்காமாட்சி மற்றும் அவரது நண்பர்கள் மேலும் அவர்களுக்கு உதவியாக இருந்த தனது மகளான 16 வயது சிறுமி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உமா மகேஸ்வரி பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் சிறுமி உட்பட 4 பேர் மீது வழக்குபதிவு செய்து காவல்துறையினர் கைது செய்தனர்.

.

Tags: கதலனடனகலலசரநததடடமடடதநதயகபரபரபபமகளவயத
Previous Post

ஆட்டோ, பைக்கில் வந்து கத்திமுனையில் வழிப்பறியில் ஈடுபட்ட 6 ரவுடிகள் கைது

Next Post

எச்.ராஜாவுக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
எச்.ராஜாவுக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

எச்.ராஜாவுக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In