Sunday, September 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

சக பணியாளரை கொன்றவருக்கு ஆயுள்: செங்கை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 10, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
சக பணியாளரை கொன்றவருக்கு ஆயுள்: செங்கை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு
4
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

செங்கல்பட்டு: சக பணியாளரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதித்து செங்கை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், பம்மல் முத்தமிழ் நகர் பகுதியில் வசித்து வந்தவர் மனோகரன்(65). புலிப்பாக்கத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இருவரும் பல்லாவரம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில், ஒன்றாக பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில், 2011-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில், மனோகரனை கீழே தள்ளிவிட்டு சக்திவேல் கடுமையாக தாக்கியுள்ளார். இதனால், தலையில் பலத்த காயம் அடைந்த மனோகரன் உயிரிழந்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த பல்லாவரம் போலீஸார் சக்திவேலை கைது செய்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு விசாரணை செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், வழக்கு விசாரணை நேற்று முடிவடைந்தது. மேலும், குற்றம் சாட்டப்பட்ட சக்திவேல் மீதான குற்றம் உறுதிபடுத்தப்பட்டதால், அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி காயத்ரி தீர்ப்பளித்து உத்தரவிட்டார். இந்த வழக்கில், அரசு சார்பில் வழக்கறிஞர் வையாபுரி ஆஜராகி வாதிட்டார்.

.

Tags: ஆயளகனறவரககசகசஙகதரபபநதமனறமபணயளரமவடட
Previous Post

சீரியல் கொலை.. அலறும் செங்கல்பட்டு! பாமகவினருக்கு குறி -ஒருவரை சுட்டுபிடித்த போலீஸ்.. 2 பேர் கைது

Next Post

டிஎன்பிஎல் இறுதிப்போட்டிக்கு முன்னேறப்போகும் 2வது அணி யார்? நெல்லை

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
டிஎன்பிஎல் இறுதிப்போட்டிக்கு முன்னேறப்போகும் 2வது அணி யார்? நெல்லை

டிஎன்பிஎல் இறுதிப்போட்டிக்கு முன்னேறப்போகும் 2வது அணி யார்? நெல்லை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In