
மதுரை: மதுரை மட்டுமின்றி தென்மாவட்டங்கள், சென்னைமற்றும் கர்நாடகா, கேரளா போன்ற வெளிமாநிங்களிலும் தனது பெயரை தெரியவைத்து செவாக்குமிக்கவராக திகழ்ந்தவர் வரிச்சியூரான் என்ற வரிச்சியூர் செல்வம்.
அவரது பெயர் செல்வம் என்றாலும், அவரது குற்றச் செயல்களை வைத்தே அவரது ஊரின் பெயருடன் பிரபலமானார். ஒரு காலத்தில் சிறு, சிறு தவறுகள் செய்ததற்காக என்னை ரவுடி என பெரிதாக்கி சொல்கிறார்கள், ‘நானொரு டம்மி பீஸ், என்னை திருந்தி வாழவிடுங்கள்’ போன்ற தகவல்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டும், நல்லவர் போன்று சித்தரித்தும், வலம் வந்த வரிச்சியூர் செல்வம் தற்போது, தனது கூட்டாளியை கொன்று துண்டுதுண்டாக வெட்டி தாமரபரணி ஆற்றில் வீசிய சம்பவத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

