
பழநி: பழநியில் போகர் ஜெயந்தி விழாவையொட்டி புலிப்பாணி ஆஸ்ரமத்தில் இன்று நடந்த சிறப்பு யாகத்தில் ஜப்பான் நாட்டை சேர்ந்த ஆன்மிக குழுவினர் கலந்துகொண்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் உள்ள மூலவர் சிலை போகர் சித்தரால் பல்வேறு மூலிகைகள் அடங்கிய நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டது. போகர் சித்தர் வைகாசி மாதம் பரணி நட்சத்திரத்தில் அவதரித்தார். நாளை (மே 18) அவரது ஜெயந்தி விழாவையொட்டி, பழநி மலைக்கோயிலில் உள்ள போகர் சந்நிதியில் அவர் வணங்கிய புவனேஸ்வரி அம்மன், மரகத லிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனைகள் நடைபெற உள்ளது.

