இன்று காலை மத்தியப்பிரதேசத்தின் கார்கோ மாவட்டத்தில் இருந்து 70 பயணிகளை ஏற்றி கொண்டு இந்தூருக்கு சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று டோங்கர்கான் பகுதியில் கார்கோனில் ஆற்றுப்பாலத்தில் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் முதற்கட்டமாக 15 பேர் உயிரிழந்ததாகவும், 25 பேர் காயமடைந்ததாகவும் மாவட்ட ஆட்சியர் சிவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

