Saturday, September 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

‘நியோ மேக்ஸ்’ மோசடியில் முக்கிய நபர்கள் கைது: சென்னையில் மடக்கிய தனிப்படை போலீஸார்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 18, 2023 - Updated on September 19, 2023
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
‘நியோ மேக்ஸ்’ மோசடியில் முக்கிய நபர்கள் கைது: சென்னையில் மடக்கிய தனிப்படை போலீஸார்
9
SHARES
15
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மதுரை: ‘நியோ மேக்ஸ் ’ நிறுவன மோசடியில் முக்கிய நபர்களான கமலக்கண்ணன், சிங்காரவேலன் ஆகியோரை சென்னையில் நேற்று தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட ‘நியோ-மேக்ஸ்’ ரியல் எஸ்டேட் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் கூடுதல் வட்டி, வைப்பீடு முதிர்வுக்கு இரட்டிப்புத் தொகை தருவதாக ஏராளமானோரிடம் முதலீடுகளைப் பெற்றனர். இதன்மூலம் பல நூறு கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்தன.

இது தொடர்பாக பாதிக்கப்பட்டோர் கொடுத்த புகார்களின் பேரில்,மதுரை பொருளாதார குற்றத் தடுப்பு போலீஸார் ‘ நியோ மேக்ஸ்’மற்றும் அதன் துணை நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர்கள் மதுரைகமலக்கண்ணன் (55), பாலசுப்பிரமணியன் (54), திருச்சி வீரசக்தி (49)மற்றும் முகவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.

இவ்வழக்கை எஸ்பி ஜோஸ் தங்கையா தலைமையில், சிறப்பு டிஎஸ்பி மணிஷா அடங்கிய குழுவினர் விசாரிக்கின்றனர்.

இவ்வழக்கில் ஏற்கெனவே 9பேர் கைது செய்யப்பட்டனர். இந்தமுறைகேட்டில் முக்கிய நபர்களான கமலக்கண்ணன், பாலசுப்பிரமணி, வீரசக்தி, சிங்காரவேலன் உள்ளிட்டோரை தனிப்படையினர் தொடர்ந்து தேடினர்.

இந்நிலையில், சென்னையில் கமலக்கண்ணன், சிங்காரவேலன் ஆகியோரை தனிப்படையினர் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்த மதுரைக்கு அழைத்து வருகின்றனர்.

இது குறித்து போலீஸார் கூறுகையில், ‘ நியோ மேக்ஸ்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்தவர் கமலக்கண்ணன். இவ்வழக்கில் முக்கிய நபர். தலைமறைவாக இருந்துகொண்டு முகவர்கள் மூலம் பாதிக்கப்பட்டோரை புகார் கொடுக்க விடாமல் தடுக்கும் நிலையில் செயல்பட்டார். போலீஸாருக்கும் சவாலாக இருந்தார். இவரை கைது செய்துள்ளோம் இவரிடம் விசாரித்தால் பல்வேறு புதிய தகவல்கள் கிடைக்கும்’ என்றனர்.

.

Tags: கதசனனயலதனபபடநபரகளநயபலஸரமககயமகஸமசடயலமடககய
Previous Post

145-வது பிறந்த தினம்: பெரியார் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின், தலைவர்கள் மரியாதை

Next Post

வடகிழக்கு பருவமழைக் காலத்தில் 31 மாவட்டங்களில் இயல்பான அளவுக்கு மழை பெய்யும்: வேளாண் பல்கலை. கணிப்பு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
வடகிழக்கு பருவமழைக் காலத்தில் 31 மாவட்டங்களில் இயல்பான அளவுக்கு மழை பெய்யும்: வேளாண் பல்கலை. கணிப்பு

வடகிழக்கு பருவமழைக் காலத்தில் 31 மாவட்டங்களில் இயல்பான அளவுக்கு மழை பெய்யும்: வேளாண் பல்கலை. கணிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In