மத்தியப் பிரதேசத்தில் அரசு ஊழியர்கள் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ளக் கூடாது என்றச் சட்டம் இருக்கிறது.
2000-ம் ஆண்டில் மத்தியப் பிரதேச சிவில் சேவைகள் விதிமுறைகள் MP Civil Services Rules, 1961 – ல் திருத்தம் செய்யப்பட்டது.
அதன்படி ஜனவரி 26, 2001க்குப் பிறகு மூன்றாவது குழந்தையைப் பெறும் எந்தவொரு அரசு ஊழியரும் அரசுப் பணிக்குத் தகுதியற்றவர் ஆகிறார்.
இந்த நிலையில், மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாராவில் அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றுபவர் பப்லு தண்டோலி (38). இவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில், மூன்றாவது குழந்தையை கருத்தரித்தால் பப்லுவின் மனைவி ராஜ்குமாரி.

இதனால் அதிர்ச்சியடைந்த தம்பதி, கர்ப்பத்தை ரகசியமாக வைத்திருக்கின்றனர். அதைத் தொடர்ந்து ராஜ்குமாரி பெண் குழந்தையைப் பிரசவித்தார்.
குழந்தை பிறந்த அதே இரவு, தம்பதி மோட்டார் சைக்கிளில் குழந்தையைத் தூக்கிச் சென்று காட்டுப்பகுதியில் குழந்தையைப் புதைத்துவிட்டுச் சென்றிருக்கின்றனர்.

