புதுடில்லி: பார்லி., தாக்குதல் நினைவு தினமான இன்று (டிச.,13), அத்துமீறி லோக்சபாவுக்கு நுழைந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். பார்வையாளர் அரங்கில் இருந்து, வண்ணத்தை உமிழும் கண்ணீர் புகை குண்டுகளுடன் இருவரும் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை எம்.பி.,க்களே மடக்கி பிடித்தனர். இந்த சம்பவத்தால் பார்லி., இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

