Sunday, September 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

துறையூர் அருகே இரவு நேரத்தில் மண் கடத்தலை தடுத்த வருவாய் ஆய்வாளர் மீது தாக்குதல: திமுக ஊராட்சித் தலைவர் உட்பட 4 பேர் கைது

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 29, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
துறையூர் அருகே இரவு நேரத்தில் மண் கடத்தலை தடுத்த வருவாய் ஆய்வாளர் மீது தாக்குதல: திமுக ஊராட்சித் தலைவர் உட்பட 4 பேர் கைது
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

திருச்சி: துறையூர் அருகே சட்டவிரோதமாக கிராவல் மண்ணை கடத்திச் சென்றதை தடுத்த வருவாய் ஆய்வாளர் கொடூரமாகத் தாக்கப்பட்டார். இதுதொடர்பாக, திமுகவைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் உட்பட 4 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகேயுள்ள நரசிங்கபுரம் மலையடிவாரத்தில் அதே ஊரைச் சேர்ந்த திமுக ஊராட்சி மன்றத் தலைவர் மகேஸ்வரன் மற்றும் சிலர் நேற்று முன்தினம் இரவு, சட்டவிரோதமாக கிராவல் மண்ணை வெட்டி கடத்திச் செல்வதாக வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, துறையூர் வட்ட வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் அங்கு சென்று, மண்ணை வெட்டும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட பொக்லைனின் சாவியை பறித்தார். ஆத்திரமடைந்த ஊராட்சி மன்றத் தலைவர் மகேஸ்வரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சேர்ந்து, பிரபாகரனை அடித்து உதைத்துள்ளனர். மேலும், கழுத்தின் பின்பகுதியில் கடித்ததுடன், தலையில் கற்களால் அடித்து காயப்படுத்தியுள்ளனர்.

இந்த கொடூரத் தாக்குதலில் பிரபாகரன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தோடியதைக் கண்ட கிராம நிர்வாக அலுவலர் சுவாமிநாதன், அவர்களிடமிருந்து பிரபாகரனை மீட்டு, பெருமாள்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், பிரபாகரன் மேல்சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆட்சியர் மா.பிரதீப்குமார் துறையூர் சென்று பிரபாகரனைச் சந்தித்து நலம் விசாரித்தார்.

இந்நிலையில், பிரபாகரன் தந்தபுகாரின்பேரில், துறையூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ஊராட்சி மன்றத் தலைவரான மகேஸ்வரன்(48), அவரது ஆதரவாளரான அதே ஊரைச் சேர்ந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் தனபால்(48), மாணிக்கபுரத்தைச் சேர்ந்த ரா.மணிகண்டன்(26), கீழகுன்னுபட்டியைச் சேர்ந்த க.கந்தசாமி(35) ஆகியோரை கைது செய்தனர்.

தற்காலிக நீக்கம்: இதற்கிடையே திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், மகேஸ்வரனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்குவதாக தெரிவித்துள்ளார்.

.

Previous Post

‘150 வயது வரை உயிருடன் இருப்பேன்’- அடித்துச் சொன்ன சரத்குமார்

Next Post

ராமேசுவரம் கோயில் தீர்த்தம் ஆன்லைனில் விற்பனை

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ராமேசுவரம் கோயில் தீர்த்தம் ஆன்லைனில் விற்பனை: அஞ்சல்துறை மூலம் வீடுகளுக்கே வந்துசேர ஏற்பாடு

ராமேசுவரம் கோயில் தீர்த்தம் ஆன்லைனில் விற்பனை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In