Monday, September 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ஜெய் ஸ்ரீ ராம்.. அதுல என்னங்க தப்பு.. மற்ற மதத்தினர் என்ன வேண்டுமானால் சொல்லட்டும்.. தமிழிசை..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 17, 2023
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
‘ஜெய் ஸ்ரீராம்’ வார்த்தையை மதம் சார்ந்ததாக அல்லாமல் வெற்றி உணர்வாகப் பார்க்கிறேன்: தமிழிசை
29
SHARES
46
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

புதுச்சேரி: “ஜெய் ஸ்ரீராம் என்ற வார்த்தையை வெற்றி உணர்வாக பார்க்கிறேன். அதில், மதம் இருந்ததாக பார்க்கவில்லை” என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.

புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின்போது பாகிஸ்தான் வீரரை நோக்கி எழுப்பபப்பட்ட ஜெய்ஸ்ரீராம் கோஷம் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்தார். அவர், “நம் நாட்டின் முயற்சியில் விண்கலம் மேலே எழும்போது ‘வந்தே மாதரம்’ என கோஷம் எழுப்பியதாக அப்துல் கலாம் தன் சுய சரிதையில் எழுதி உள்ளார். அப்படித்தான் வெற்றி என்று வரும் போது உள் உணர்வோடு கிரிக்கெட் ரசிகர்கள் கோஷம் எழுப்பினர்.

“ஜெய் ஸ்ரீராம்” என்பது நாட்டின் வெற்றியைக் குறிக்க வேண்டும் என அவர்கள் நினைத்துள்ளனர். அதில் மதம் இருந்ததாக நான் பார்க்கவில்லை. அதில் வெற்றி உணர்வு இருந்ததாகத்தான் பார்க்கிறேன். நாடு வெற்றி பெற்றது என்பது தொடர்பாக சொல்லக் கூடிய வார்த்தையாகத்தான் பார்க்கிறேன். எனவே, ஜெய் ஸ்ரீராம் என்ற வார்த்தையை மதம் சார்ந்தாக பார்க்கவில்லை, வெற்றி உணர்வு சார்ந்ததாகத்தான் நான் பார்க்கிறேன்.

தேசிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவிகள் போராட்டம் நடத்துகிறார்கள். போராட்டம் நடத்தும் அளவுக்கு தேசிய கல்விக் கொள்கையில் தவறானது எதுவும் இல்லை. இதனை நான் அவர்களை சந்தித்துப் புரியவைப்பேன். வகுப்பறையில் இருந்து உலக அளவில் மாணவர்களை நான் கொண்டு செல்வேன் என பிரதமர் கூறி உள்ளார். பல லட்சக்கணக்கான பேரிடம் கருத்து கேட்டுத்தான் தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. புரிதல் இல்லாமல் சில மாணவிகள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். அவர்கள் என்னை வந்து சந்திக்கலாம். தாய்மொழியை ஊக்கப்படுத்துவதுதான் புதிய கல்விக் கொள்கை. யாரும் தமிழுக்கு எதிரானவர்கள் இல்லை. அதனால், போராட்டம் தேவையில்லை. பேச்சுவார்த்தையே போதுமானது. பிரதமர் மோடி ஆட்சியில் தாய்மொழிக்கு பங்கம் வர வாய்ப்பு இல்லை” என்று தமிழிசை தெரிவித்தார்.

.

Tags: அலலமலஉணரவகபசரநததகதமழசபரககறனமதமவரததயவறறஜயஸரரம
Previous Post

வாழை, பாக்கு மரங்கள் வெட்டி சாய்ப்பு: கொத்தமங்களத்தில் 1,100 போலீஸார் பாதுகாப்பு

Next Post

கோவையில் வெளிநாட்டு மதுபானங்கள் விற்கும் கிளப்களில் விதிமீறல்கள்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கோவையில் வெளிநாட்டு மதுபானங்கள் விற்கும் கிளப்களில் விதிமீறல்கள்

கோவையில் வெளிநாட்டு மதுபானங்கள் விற்கும் கிளப்களில் விதிமீறல்கள்

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    தமிழிசை சௌந்தரராஜன் சொன்ன கருத்தை நான் ஆதரிக்கிறேன் மிகவும் தைரியமாக கருத்தை பதிவு செய்துள்ளார்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In