கடந்த 2006 – 11 காலகட்டத்தில் கனிம வளங்கள் மற்றும் சுரங்கத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணிக்கு விழுப்புரம் வட்டம் வானூர் அருகே உள்ள பூத்துறை கிராமத்தில் செம்மண் குவாரிக்கு அனுமதி அளித்தார். அதில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுக்கப்பட்டதாக, அடுத்து வந்த அதிமுக ஆட்சியில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
2012-ம் ஆண்டு அமைச்சர் பொன்முடி, கவுதம சிகாமணி, ராஜமகேந்திரன் உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பாக விழுப்புரம் கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு அமலாக்கத்துறையினர் அமைச்சர் பொன்முடி மற்றும் கவுதமசிகாமணி ஆகியோர் வீட்டில் ஜூலை 17ம் தேதி மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

