Saturday, September 19, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மெரினா கடற்கரையில் காவல் வாகனம் மோதி பெண் உயிரிழப்பு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 22, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
மெரினா கடற்கரையில் காவல் வாகனம் மோதி பெண் உயிரிழப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: அம்பத்தூர் கள்ளிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் மேரி (57). இவர் முன்னாள் முதல்வர்களின் நினைவிடங்களை சுற்றி பார்ப்பதற்காக மெரினா கடற்கரைக்கு நேற்று காலை வந்துள்ளார். பின்னர் காலை 9.40 மணியளவில் காமராஜர் சாலையை கடக்க முயன்றபோது தலைமைச் செயலகம் நோக்கி வந்த காவல்துறை வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே மேரி உயிரிழந்தார்.

தகவல் அறிந்து அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் ரத்தினவேல் பாண்டியன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடம் விரைந்து மேரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த அப்பிரிவு போலீஸார் விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை ஓட்டி வந்த காவலர் சத்தியமூர்த்தியை (28) கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதேபோல, தண்டையார்பேட்டை, நாவலன் நகரை சேர்ந்தவர் சென்னை மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் வர்ணமூர்த்தி (58). நேற்று காலை இவர் வேலைக்கு செல்வதற்கு அதே பகுதி கைலாசம் தெரு வழியாக சென்று கொண்டிருந்தார். அங்கு எதிரே வந்த லாரி இவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே வர்ணமூர்த்தி இறந்தார்.

விபத்தை ஏற்படுத்தியதாக லாரி ஓட்டுநர் திருவொற்றியூர், காலடிப்பேட்டையை சேர்ந்த வெங்கடேசன் (44) என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

.

Tags: உயரழபபகடறகரயலகவலபணமதமரனவகனம
Previous Post

“எங்களுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது” – கட்டுமானத் தொழிலாளர் நல வாரியம் குற்றச்சாட்டு

Next Post

கல்விக் கூடங்களில் ஹிஜாப் அணியத் தடையில்லை என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடுக: சீமான்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கல்விக் கூடங்களில் ஹிஜாப் அணியத் தடையில்லை என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடுக: சீமான்

கல்விக் கூடங்களில் ஹிஜாப் அணியத் தடையில்லை என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடுக: சீமான்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In