“இன்று ஒட்டுமொத்த பாஜகவும் எனக்கு எதிராக உள்ளது. கட்சியையும், சின்னத்தையும், பெயரையும் திருடிய பிறகும் எனக்கு பயப்படுகிறார்கள். ஏனென்றால், உத்தவ் தாக்கரே ஒரு நபர் மட்டுமல்ல. பாலாசாகேப்பின் எண்ணங்களின் உருவகமாகவும் இருக்கிறார். ”என்று சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே, ஜூலை 27 அன்று கூறினார்.
பாஜகவின் எந்தத் தலைவரும் எனக்கு எதிராகப் பேசுவதைத் தவிர வேறு எதுவும் கூறவில்லை,” என்று குஜராத் கலவரத்திற்குப் பிறகு மோடிக்கு ஆதரவான பாலாசாகேப்பின் நிலைப்பாட்டை தாக்கரே எடுத்துரைத்தார், “இப்படியா நீங்கள் அவருக்கு மரியாதையை திருப்பிச் செலுத்துகிறீர்கள்?” “நான் பாலாசாகேப் தாக்கரே வகுத்த பாதையில் செல்கிறேன், எனவே நான் அவர்களுக்கு எதிராக போராடுகிறேன்,” என்று அவர் மேலும் கூறினார்.
எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை “ஒரு குடும்பத்தை காப்பாற்ற ஒன்று சேர்ந்த தனிநபர்களின் குழு” என்று BJP கூறியதற்கு பதிலடி கொடுத்த தாக்கரே, “ஆம். எங்கள் குடும்பத்தை காப்பாற்ற நாங்கள் ஒன்று சேர்ந்துள்ளோம். நமது நாடு நமது குடும்பம் அதுவே நமது இந்துத்துவா! என்றார்.
“கோவிட் தொற்றுநோய்களின் போது, ’எனது குடும்பம் எனது பொறுப்பு’ என்ற முழக்கத்தை நான் வழங்கியிருந்தேன். இப்போது முழு நாட்டிற்கும் ஒரே முழக்கத்தை வழங்குவதற்கான நேரம் இது, ”என்று தாக்கரே மேலும் கூறினார். “இந்தியா என்டிஏவை தோற்கடிக்க வேண்டும், நான் அதை செய்வேன்,” என்று தாக்கரே கூறினார்,
மேலும் தேர்தலில் வெற்றிபெற அவர்களுக்கு இப்போது EVMகள் தேவையில்லை, ஏனென்றால் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் இறுதியில் BJP அவர்களுடன் செல்ல்லும் என்றார்..

