பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பாஜக நாடாளுமன்றக் கூட்டத்திற்குப் பிறகு பேசிய பாஜக எம்பி ரவிசங்கர் பிரசாத், அவையில் எதிர்க்கட்சிகளின் நடத்தையை பிரதமர் கடுமையாக சாடினார் என்று கூறினார்..
அப்போது அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறும்போது, இங்கு நடைபெற்ற பாஜகவின் நாடாளுமன்றக் கட்சிக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “எதிர்க்கட்சிகளின் நடத்தையைப் பார்க்கும்போது, அவர்கள் எதிர்க்கட்சியில் இருக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. நாங்கள் பொதுமக்களின் நலனுக்காக உழைத்து முன்னேற வேண்டும்” என்று நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்தார்.
மேலும் அவர் எதிர்க்கட்சிகள் மிகவும் விரக்தியிலுள்ளனர் மற்றும் அவர்கள் முயற்சி திசையற்றது என்றும் எதிகட்சிகளை சாடியுள்ளார்.


